நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது.
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சாதியின் சேர்க்கை என்பதா
சொல் மனமே.
கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை
மழையின் பயணம் எல்லாம் மண்ணைத் தீண்டும் வரை
படகின் பயணம் எல்லாம் நதியைத் தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை.
காற்று வழி போவதை நாற்று சொல்கின்றது
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கின்றது.
கிளைகள் வீழ்ந்தாலுமே இலையில் துளி உள்ளது
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவு உள்ளது
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது..
- வைரமுத்து.
இந்தப் பாடல் தான் முதன்முதலாக சோகமும் பிரிவும் எனக்கு சொல்லிக் கொடுத்தது. நீண்ட வருடத் தேடலில், மறதியில் சமீபத்தில் தான் இதைக் கண்டுபிடித்தேன்.
காலையும் இரவும் செடிகளோடு சிரித்து, பூக்களைத் தடவி; தனியாய் நான் பார்த்த வான் நிறமும், என்னைக் கடந்து போன பிறைகளும், . அந்த நினைவும் நிறமும், துளியும் மாறாமல்..
காற்று உன் காதில் ஏதோ சொன்னது.
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சாதியின் சேர்க்கை என்பதா
சொல் மனமே.
கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை
மழையின் பயணம் எல்லாம் மண்ணைத் தீண்டும் வரை
படகின் பயணம் எல்லாம் நதியைத் தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை.
காற்று வழி போவதை நாற்று சொல்கின்றது
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கின்றது.
கிளைகள் வீழ்ந்தாலுமே இலையில் துளி உள்ளது
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவு உள்ளது
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது..
- வைரமுத்து.
இந்தப் பாடல் தான் முதன்முதலாக சோகமும் பிரிவும் எனக்கு சொல்லிக் கொடுத்தது. நீண்ட வருடத் தேடலில், மறதியில் சமீபத்தில் தான் இதைக் கண்டுபிடித்தேன்.
காலையும் இரவும் செடிகளோடு சிரித்து, பூக்களைத் தடவி; தனியாய் நான் பார்த்த வான் நிறமும், என்னைக் கடந்து போன பிறைகளும், . அந்த நினைவும் நிறமும், துளியும் மாறாமல்..