காற்றுடன் பேசுவதாய் எழுதிய வரிகள் இவை
உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா ?
ம்ம்.
நாய்களோடு நீ பேசுவாயாமே !
கொஞ்சம் கொஞ்சம்.
பிடித்திருக்கிறதா ?
ம்ம்.
நாய்களோடு நீ பேசுவாயாமே !
கொஞ்சம் கொஞ்சம்.
பிடித்திருக்கிறதா ?
பல நாய்களுக்குப் பிடிக்கும்
பல மனிதர்களுக்குப் பிடிக்காது.
அது போகட்டும்
இந்தா புயலின் இலக்கணம் !
உனக்குப் பயன்படும்.
வேண்டாம்
முடிந்தால்
சருகுகளின் லிபி சொல்லித்தா.