ஞாயிறு, 15 மே, 2011

மொழி

                                               காற்றுடன் பேசுவதாய் எழுதிய வரிகள் இவை

உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா ?
     ம்ம்.
நாய்களோடு நீ பேசுவாயாமே !
     கொஞ்சம் கொஞ்சம்.
பிடித்திருக்கிறதா ?
     பல நாய்களுக்குப் பிடிக்கும்
     பல மனிதர்களுக்குப் பிடிக்காது.
அது போகட்டும்
இந்தா புயலின் இலக்கணம் !
உனக்குப் பயன்படும்.
     வேண்டாம்
     முடிந்தால் 
     சருகுகளின் லிபி சொல்லித்தா.  
இன்றைய நாளும்
கருப்பாகவே முடிகிறது-
செல்பேசியில் அம்மா சொன்னது 

புதன், 11 மே, 2011

கரு

உடலின் அணுக்களில்
உனைக்காணும் ஆசையில்
எலெக்ட்ரான்களுக்கு சுழற்சி

ஞாயிறு, 1 மே, 2011

பிரம்மஞானம்

மழை பாடாத கவிதையா !
மழையைப்பாடாத கவிஞனா !

மழையில்
                  நனைதல் தவம்
                  நடத்தல் வரம்

அந்தச்சாலையில்
அந்தச்சாரலில்
எங்கள் கைகளில்
ஏந்திய மழைநீர் இனித்தது
அவள் வாசனையோடு

அந்தச் சாலையில்
அந்தச் சூழலில்
வழிந்த கண்ணீர் மறைந்தது
விழுந்த மழையோடு

எத்தனைத் தூய்மை
எத்தனைக் குளுமை
எத்தனை நினைவுகள்
நிறைக்கிறது இம்மழை - நம் வாழ்வில்

தொலைந்து போன நட்சத்திரங்களை
மின்னல் அடித்துத் தேடிய மேகம்
கரைந்து போன விண் நீராய்
விரைந்து வருவது - மண்ணில் ஆறுகளை
வரைந்து பார்ப்பதற்கு அல்ல
உன்னை சுத்தப்படுத்த 
உன் மண்டைக் களிமண்ணை
அடித்துச் செல்ல

கேட்டுப் பாரடா; மழைச்சத்தம் -
தேவகானம்
புரிந்து கொள்ளடா; மழையின் சுழற்சி -
பிரம்மஞானம்.