பாறையின் அந்தகாரம்.
முக்கால் நிலவொளி
முனகும் காற்றொலி.
நெருப்புப் பந்தம்
பறையின் சந்தம்.
காட்டுப் பன்றி கூட்டு மந்தி
தங்க அழகு மிளா
இங்கே கோ உலா.
வெள்ளை அருவியே கொள்ளைக் கருவியே
வெள்ளி வேலும்
வெள்ளி வாளும்
வெள்ளைக் கொடிகாட்டும்
வெள்ள நீரின்
கள்ளத் தனமோ கள்ளி தனமோ
கடல்கொண்டேன் குடல்தாகம்
உடல்கொண்டேன் கூடல்தாகம்.
நாடும் எனதோ
வாடும் மனதோ.
அரண்மனை எனதோ எம்மனை இனிதோ.
உன்னை விடுத்து உலகெலாம் வென்று
சரித்திரம் படைத்தேன்
ஒருகுடை ஏற்றினேன்.
யானோ அரசன் யானோ வளவன்
நானோர் அசடன் நாளைய கிறுக்கன்.
இறந்ததும் என்னை
இங்கே புதையும்
நான் கொண்டுசெல்ல நினைப்பது
அகத்திய தமிழும்
அருவி நீரும்.
மறுபிறப்பு இருந்தால்பாறையாய் பிறப்பேன்.
நுரையைத் தாங்கி கரைந்து போவேன்.
.jpg)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்கு