நன்னலன்றி வேம்புநுகர் காமத்துரோகிகள் போற்
பின்னையொரு தெய்வத்தைப் பேசாமே - எந்நாளும்
சாற்றுவதும் காமகலை சாதிபதுங் கரணம்
போற்றுவோம் காமனடிப் போது.
இலக்கணம்:
கொக்கோகம் எனும் மதன நூலின் முதல் பாடலாக இந்த வெண்பா அமைந்துள்ளது. இரண்டாம் அடியில் எந்நாளும் என்ற தனிச்சொல் இருப்பதால், இது நேரிசை வெண்பா. நன்னல், பின்னை; சாற்று, போற்று என இரு வேறு எதுகைகள் இருப்பதால் இரு விகற்ப நேரிசை வெண்பா.
பொருள்:
நன்னலன்றி வேம்புநுகர் - கரும்பு இருக்கையில் வேம்பு எடுத்து பயன்படுத்தும் (நன்னல் - கரும்பு) காம துரோகிகள் போல், பின்னையொரு தெய்வத்தை - வேறு தெய்வத்தைப் பற்றி பேசமாட்டேன் (பின்னை - வேறு, பேசாமே- பாடாது, போற்றாது ). சாற்றுவதும் காமகலை - சாற்றும் என்பதற்கு தீர்மானமாய், தீர்க்கமாய் சொல்வது என்று எடுத்துக்கொள்ளலாம். எந்நாளும் சொல்வதும், செய்வதும் (சாதிப்பதும்) காம கலை. அதற்கு காமனைப் போற்றுவோம்.
பின் இணைப்பு :
தோகை விரிக்கும் கரும்பு இருக்கையில், தோகை விரிக்கும் மணப்பெண் இருக்கையில்; மற்ற நினைவும், சுவைத்திட வேம்பும் ஏற்றதா யோசி இனி.
தோகை விரிக்கும் கரும்பு இருக்கையில், தோகை விரிக்கும் மணப்பெண் இருக்கையில்; மற்ற நினைவும், சுவைத்திட வேம்பும் ஏற்றதா யோசி இனி.
தோகை விரிக்கும்
கரும்பு இருக்கையில்
தோகை விரிக்கும்
மணப்பெண் இருக்கையில்
மற்ற நினைவும்
சுவைத்திட வேம்பும்
ஏற்றதா யோசி இனி.

pin inaippu puthu kavithai vadivil ezhutha arambithu venbavagi vitathu..
பதிலளிநீக்கு