செவ்வாய், 2 ஏப்ரல், 2013

கொக்கோகம் - தோகை விரிக்கும் கரும்பு



நன்னலன்றி வேம்புநுகர் காமத்துரோகிகள் போற்
பின்னையொரு தெய்வத்தைப் பேசாமே - எந்நாளும்
சாற்றுவதும் காமகலை சாதிபதுங் கரணம்
போற்றுவோம் காமனடிப் போது.


இலக்கணம்:
கொக்கோகம் எனும் மதன நூலின் முதல் பாடலாக இந்த வெண்பா அமைந்துள்ளது. இரண்டாம் அடியில் எந்நாளும் என்ற தனிச்சொல் இருப்பதால், இது நேரிசை வெண்பா. நன்னல், பின்னை; சாற்று, போற்று என இரு வேறு எதுகைகள் இருப்பதால் இரு விகற்ப நேரிசை வெண்பா.

பொருள்:
நன்னலன்றி வேம்புநுகர் - கரும்பு இருக்கையில் வேம்பு எடுத்து பயன்படுத்தும் (நன்னல் - கரும்பு) காம துரோகிகள் போல், பின்னையொரு தெய்வத்தை - வேறு தெய்வத்தைப் பற்றி பேசமாட்டேன் (பின்னை - வேறு, பேசாமே- பாடாது, போற்றாது ). சாற்றுவதும் காமகலை - சாற்றும் என்பதற்கு தீர்மானமாய், தீர்க்கமாய் சொல்வது என்று எடுத்துக்கொள்ளலாம். எந்நாளும் சொல்வதும், செய்வதும் (சாதிப்பதும்) காம கலை. அதற்கு காமனைப் போற்றுவோம்.


பின் இணைப்பு :
தோகை விரிக்கும் கரும்பு  இருக்கையில், தோகை விரிக்கும் மணப்பெண் இருக்கையில்; மற்ற நினைவும், சுவைத்திட வேம்பும் ஏற்றதா யோசி இனி.


தோகை விரிக்கும் 
கரும்பு  இருக்கையில்  
தோகை விரிக்கும்
மணப்பெண் இருக்கையில் 
மற்ற நினைவும்
சுவைத்திட வேம்பும்
ஏற்றதா யோசி இனி.


1 கருத்து: