திங்கள், 17 ஜூன், 2013

வை கை


விருப்பம் ஒன்றான பின்
மறுப்பும் உண்டோ.
அலைபோல் ஆசைகள்,
வலைபோல் சூழ்நிலை,
காற்றில் நிற்கும்
ஒற்றை விதையாய்,
எத்தனை காலம்
எத்தனை பாரம்.
விரும்புதலும் விருப்பமும்
நமக்குள்  ஒன்றாகி,
வளர்ந்த நிறைவில்
வைகை  வெள்ளமோ?
மூச்சுக் காற்று
அரிவையின் செவியில்
அருவியின் சத்தமோ?



அருவியும் சரி 
ஆறும் சரி;
இரத்த ஓட்டத்தை
இரகசியமாய் அதிகரிக்கிறது.
ஆறு ஸ்பரிசம் என 
அருவி காமம் என.. 









பரிபாடல் சொல்லும் அன்பும் ஊடலும், அழகான மதுரையும்; என்னை இனம்புரியா உணர்விற்குக் கொண்டு செல்ல.. இசை நூல் எனும் பரிபாடலின் இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பு, இதற்கு இசை அமைத்த நல்லச்சுதனார் மருத்துவர் என்பது.


(1) விருப்பொன்று பட்டவ(ர் ) (உ)ளநிறை (உ)டைத்தென
வரைச்சிறை உடைத்ததை வையை வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை........




(2) ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்தமைந்த காமம்
வாடற்க வையை நினக்கு..

                                                          -  நல்லந்துவனார், பரிபாடல் (6 ம்  பாடல்).

ஞாயிறு, 9 ஜூன், 2013

நீ ஆ ? நான் ஆ ?



கடற்கரை மணலில் 
கைவிரல் மணமில் 
நிலவொழுக
அலைசிரிக்க 
முதலில் தொலைவது 
நீயா நானா? 

வாகனப் புகையில்
படிகிற கரியில்
வெயிலடிக்க
நிழல்தர 
முன்னால்  நடப்பது
நீயா நானா?

கேரளத்து சேலையில்
 உன்கை படுகையில் 
கட்டிக்கொள்ளவோ 
கட்டிவிடவோ
முதலில் கேட்டது
நீயா நானா?

கட்டிகொள்ளத் தெரியாதென 
கட்டிவிடத் தெரியாதென 
கோபம் உயர
சண்டை வளர்க்க 
முதலில் சொன்னது
நீயா நானா?

சனி, 1 ஜூன், 2013

உனதலையும் எனதலையும்



முடியும் என்ற நிலையிலும்
முடி ஒதுக்கி - சிலர் 
என்னைத் தேடி வருகையிலும் 
நான் காப்பது ஒழுக்கமல்ல
நேர்மை. 
புலன்கள் அடங்காது
புலம்புகையில்
புத்தி தப்பி சலனமாகையில் 
உன்பெயர்தானே துணையாகிறது.
நானென்பதே  நீதான்
நீயென்பதால் நானும் மனிதன் தான்.