![]() |
கடற்கரை மணலில்
கைவிரல் மணமில்
நிலவொழுக
அலைசிரிக்க
முதலில் தொலைவது
நீயா நானா?
வாகனப் புகையில்
படிகிற கரியில்
வெயிலடிக்க
நிழல்தர
முன்னால் நடப்பது
நீயா நானா?
கேரளத்து சேலையில்
உன்கை படுகையில்
கட்டிக்கொள்ளவோ
கட்டிவிடவோ
முதலில் கேட்டது
நீயா நானா?
கட்டிகொள்ளத் தெரியாதென
கட்டிவிடத் தெரியாதென
கோபம் உயர
சண்டை வளர்க்க
முதலில் சொன்னது
நீயா நானா?

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு