செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

Is தொல்காப்பியம் viable


"மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே"
                                                     தொல்காப்பியம் (எழுத்து - மரபியல் - சூத்திரம் 18)


மெய்யின் வழி அது உயிர் தோன்றும் நிலையே என்பது மெய் எழுத்துக்கள் இருக்க, அதன் வழியில் உயிர் சேர்ந்து உயிர்மெய் தோன்றும் நிலை கொண்டது உயிர் மெய் என்றவாறு.
உதாரணம்: க் + அ = க என உருவாக.

இது ஒரு புறம் இருக்க, நமக்குத் தெரிந்த வேறு ஒன்றைப் பார்போம்.


There lies the body of fetus in utero (inside of uterus); to which life adds in the form of lung maturity so as to make it viable for separate existence. From a mere body of fetus turning into a viable fetus for separate existence it remains in the womb. For what seems to be an important change over, the lung to respire body becomes human. is this we call life adding? is this why legal systems take into consideration the separate existence? (Textbooks of Medicine On viability)


தனியாக இயங்க முடிவதை viability என்று சொல்கிறோம். ஒரு பிண்டம் (மெய்) உயிர் பெறுகிறது, தனியாக இயங்க முடிகிற நிலையை அடைகிறது. இது நுரையீரல் முதிர்வை பொறுத்தது என்பது மருத்துவம். அது கொண்டே, சட்டங்கள் கூட கரு சம்பந்தமான வழக்குகளில், கரு தனியே இயங்கக் கூடியதா என்று கேட்கின்றன.

மெய் (உடல்) இருக்க, உயிர் சேர உயிர்மெய் நுரையீரல் காற்றில் உருவாகி வருகிறது (அது புணர்வில் உயிர் மயங்கி மெய் சேர்கிறது என்பது தனிக்கதை) என்பது தொல்காப்பியம்.

எப்படி இந்தத் தமிழன் இப்படி மொழி செய்தான். எப்படி இவர்களால் இதெல்லாம் உணர முடிந்தது ?

"ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம்" என்றது இதற்குத்தானோ?.

தொல்காப்பியம் இன்றைக்கும் இயங்கக்கூடியதே (viable). 

1 கருத்து: